Episode
கைவல்ய நவநீதம் -25
- Podcast
- Atmanandalahari
- Published
- Feb 19, 2026
- Duration seconds
- 1617
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/25/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/25.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 76 தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல், பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில், கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும், நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான். பாடல் : 77 அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித், தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய், மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண, நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான். பாடல் : 78 அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள, வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான், துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான், குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான். பாடல் : 79 ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட, மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி, உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன், செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி. பாடல் : 80 சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக், கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார், துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான, நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே.