Episode
கைவல்ய நவநீதம்-23
- Podcast
- Atmanandalahari
- Published
- Feb 8, 2026
- Duration seconds
- 2430
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/23/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/23.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 66 எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று, சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ, பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான், அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய். பாடல் : 67 அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும், அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும், அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை, அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே. பாடல் : 68 மதுரமாம் கட்டி சுட்ட மாப்பணி யாரம் எல்லாம், மதுரமாக் கியஅ தற்கு மதுரம்தான் சுபாவம் அன்றோ, அதுவிது எனும்ச டங்கள் அறிவாக அறிவைத் தந்தே, அதுவிது இரண்டும் ஆகா அகம்பொருள் அறிவாய் நீயே. பாடல் : 69 இந்தநீ துவம்ப தத்தின் இலட்சியப் பொருளாம் என்றும், பந்தமில் பிரம மேதற் பதந்தனின் இலட்சி யார்த்தம், அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே வாச்சி யார்த்தம், சந்ததம் பேதம் ஆவார் தமக்கயிக் கியங்கூ டாதே. பாடல் : 70 பேதம்ஆ னதுவும் கேளாய் பெயராலும் இடங்க ளாலும், ஓதரும் உபாதி யாலும் உடலாலும் உணர்வி னாலும், பாதலம் விசுவம் போலப் பலதூரம் அகன்று நிற்பர், ஆதலால் இவர்க்கெந் நாளும் அயிக்யமென் பதுகூ டாதே.