Episode
கைவல்ய நவநீதம் -22
- Podcast
- Atmanandalahari
- Published
- Feb 3, 2026
- Duration seconds
- 1734
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/22/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/22.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 61 கரணமாம் மனது புத்தி கர்த்தாவாம் அவை ஆன் மாவோ, தரமுள இரண்டு கோசம் சத்துவ குணவி காரம், வரம்அறு துயில் ஆநந்த மயனையும் நான்என் னாதே, விரவிய தமஅஞ் ஞான விருத்தியின் விகாரம் ஆமே. பாடல் : 62 சத்தொடு சித்ஆ நந்தம் சமம்திரம் சாட்சி ஏகம், நித்தியம் வியாபி ஆன்மா நீயதுவா யறிந்து, பொத்தொடு சமம்துக் காதி பொருந்துபே தங்கள் ஆன, குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியில் ஆவாய். பாடல் : 63 பஞ்சகோ சமும்விட் டப்பால் பார்க்கின்ற பொழுது பாழே, விஞ்சிய ததுவல் லாமல் வேறொன்றும் தெரியக் காணேன், அஞ்சன இருளை யோநான் அகம்என அநுப விப்பேன், வஞ்சம் இல் குருவே என்ற மகன்மதி தெளியச் சொல்வார். பாடல் : 64 முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் எண்ணி எண்ணி, ஒன்பது பேரைக் கண்ட ஒருவன் ஆம் தனைக்கா ணாத, பின்பவன் இடையில் கண்ட பெரியபாழ் அவனோ பாராய், அன்புள மகனே காண்ப தடங்கலும் காண்பான் நீயே. பாடல் : 65 தூலசூக் குமஅஞ் ஞானம் தோன்றும்மூன் றவத்தை தாமும், காலமோர் மூன்றும் சன்மக் கடல்எழும் கல்லோ லங்கள், போலவே வந்து வந்து போனஎத் தனைஎன் பேன்நான், ஆலமர் கடவுள் ஆணை அவைக்கெலாம் சாட்சி நீயே.